ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் - பகிர்வு


 

சிறுகதைகளின் போக்குகளும் அதன் புழங்குவெளிகளும் காலத்திற்கேற்ப வெவ்வேறான தகவமைப்பை நிகழ்த்தியவாறு இருக்கின்றனபுதிய வாயில்களை புதுக்குரல்கள் திறக்கின்றனஅத்திறப்புகளில் மதிஅழகனின் வருகையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றுஎட்டுச் சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பாக ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் இருக்கிறதுஒற்றைத் தன்மையிலான கதைசொல்லல் முறையை மதி கையாண்டிருக்கிறார்இது வாசிப்பு மனதிற்கு சில நேரங்களில் தடையாகவும் இருக்க வாய்ப்புள்ளதுஒரு கருத்தியலை எடுத்து அதனைச் சுற்றி பாத்திர அமைப்புகளைத் தேர்ந்து கட்டமைத்து உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறதுஅறிவின் வழியாக இக்கதைகள் அணுகப்பட்டிருக்கிறதுஇவற்றில் பனிச்சுடலை மட்டும் சிறுதெய்வ வேரினைத் தொட முயற்சி செய்துள்ளதுபெரும்பாலான கதைகளில் ஒரு பாத்திரம் கதையைத் துவங்க வேறொரு பாத்திரம் அதை முடித்துவைக்கிறதுபுத்தர்பைபிள்சிலப்பதிகாரம்ஆண்டாள்சுடலைமாடன் போன்ற முன்னத்திகளைப் படிமங்களாக கதைகளில் கையாண்டிருக்கிறார்அதன் சாராம்சங்களை எடுத்துக்கொண்டு மாயப் புனைவாய் எழுதிப் பார்த்திருக்கிறார் மதிபின்னட்டையில் குறிப்பிட்டிருக்கும் எதார்த்தத்தை முற்றிலும் மறுதலித்த கதைகள் இவை என்ற அறுதியை முழுமையாகக் கொள்ளமுடியவில்லைஎதார்த்த உலகில் இருந்தே இக்கதைகள் பிறக்கின்றனபிற்பாடு அதன் போக்கு மாயத்திற்குள் நுழைகிறது.

ஒவ்வொரு கதையிலும் பிராதானப் பாத்திரத்திற்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதுமனரீதியிலும்புற உலகம் வழியாகவும் அப்பிரச்சினையை அப்பாத்திரம் எதிர்கொள்கிறதுகேள்விகளுக்கான பதிலைப் பாத்திரங்கள் தேடுகின்றனசிக்கல் மிகுந்த அதன் முடிச்சை அவிழ்ப்பதாய் நீண்டு செல்கிறது கதைகள்அம்முடிச்சை வாசிப்பவர்களும் அவிழ்க்கும் தேவையை உருவாக்குகிறதுபாத்திரங்கள்(சிலமுட்டாளாக இருக்க விரும்பாதவையாக இருக்கின்றனகூடுதல் அறிவுடன் வார்த்தைகளை பிரயோகிக்கின்றனஇதனாலேயே Quotes நிரம்பிய தொகுப்பாக இருக்கிறதுஇது எல்லாமும் எழுத்தாளனின் குரல் என்று புரிந்துகொள்ள முடிகிறதுமொழிபெயர்ப்புத் தன்மையில் கதைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாதுதான்மார்கழியில் ஒரு காதல் கதை எனும் கதை காதல் காமம் என்கிற உள்ளடக்கம் கூடிய நகைச்சுவை கதையாக இருக்கிறது.  இத்தொகுப்பில் உள்ள ஒரே நகைச்சுவை கதை இதுதான்நாடகமாக சொல்லப்பட்டதால் விதூஷகன் மூலம் அவ்வங்கதத்தை உணர முடிகிறதுஇருந்தாலும் நாடகமாக்கிய இடங்களில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

கதைகளுக்குள் வரலாறுகள் சொல்லப்படுகிறதுசில கதைகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால்அதாவது இசை கதையில் இசை பிறந்த வரலாறு புனைவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதுபலூன் கதையிலும் தான்பலூன் கதை ஒருபுறம் அறிவியல் கதையாகவும் இருக்கிறதுஅதேபோல ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் கதையில் காப்பிய காலக்கட்டத்தின் மாந்தர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்சாரா வெலாஸ்கோ தார்ன்டன் (ரோல்ஸ்ராய்ஸ் நடனமங்கை மாடல்தனக்கு ஏற்பட்ட இழிவை மாற்ற வேறு நிலத்திற்கு புறப்பட்டு  காப்பிய நூற்றாண்டில் மாட்டிக்கொள்கிறார்அவருக்கு வணிகம் கற்றுத் தரப்படுகிறதுதிசையாயிரம் ஐந்நூற்றுவர் குழுவை விஞ்சும் வணிகராக மாறுகிறார்கண்ணகியின் கதை உபகதையாக சொல்லப்படுகிறதுகண்ணகியும் ஒருவகையில் வணிகரின் (மாநாய்க்கன்மகள் தான்இக்கதையின் இறுதியை மேகலை (மணிமேகலைபாத்திரம் முடித்துவைக்கிறது. The Scale கதையில் ஆசையின் அளவுகோலை அறிய முற்படுபவன் புத்தரிடம் சரணடைவதாய் அமைந்துள்ளதுஅதேபோல கதைகளுக்குள் அஃறிணை உயிர்கள்(புலி,குருவி,மான்பேசும் இடங்கள் இருக்கிறதுஅவை தங்களுக்குள்ளும் மனிதர்களிடமும் பேசுகின்றன.

சாபம் பற்றி ஆராய்ந்தவன் குறிப்புகள்பனிச்சுடலை ஆகிய கதைகள் அமானுஷ்யங்கள் கொண்ட மாயத்தைப் பேசுகின்றனசாபம் கதை சாபத்தைக் குறித்து ஆராய்பவர்களின் பார்வையில் பயணித்து வேதகாமத்தின் சாபக் குறியீடான பாம்பைக் கொண்டு முடிகிறதுஇதில் இந்து மதத்தின் தர்மனை அதாவது காலனையும் வேதகாமத்தையும் இப்பாம்பு இணைக்கிறதுஒருசில கதைகளைத் தவிர்த்து மற்றயனைத்தும் நேரியல்பற்ற கதைகள்அந்நேரியல்பற்ற பண்பைச் சரியாகக் கையாண்ட கதையாகப் பனிச்சுடலை இருக்கிறதுஒரு மரணத்தின் பின்னணியை ஆராயச் சென்று அதிலுள்ள அமானுஷ்யத்தை அறிந்து சுடலைமாடனில் வந்துமுடிகிறதுஇது லண்டனில் நடக்கும் கதைஅங்கு மரண தேவனுக்கும் மயானத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளதுஇங்கு சுடலை மாடனுக்கும் மயானத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளதுஇந்த இரண்டு புள்ளிகளும் இக்கதையில் இணைகின்றன.

முடிவாய், இக்கதைகள் அனைத்தும் உள்ளுள் எழும் கேள்வி, அதனையொட்டிய சிந்தனை, அதனெழுச்சியாலான தேடுதல், பின்னர் தெளிவை கண்டடைதல் என்ற கோர்வையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித நுண்ணுணர்வின் அலைகளை இத்தொகுப்பில் குறைவே. உணர்வு வெளிப்பாடுகளுக்கான தேவைகள் ஆங்காங்கே, பனிச்சுடலை போன்ற கதைகளில் வெளிப்பட்டிருந்தாலும் முழுமையான ஒன்றை கடத்தவில்லை. அதற்கு முன்கூறிய அறிவின் நிலையிலிருந்து பிறந்த கதைகளாகவே இவை இருப்பதும் ஒரு காரணி. ‘ஆசையும் ஆச்சரியமும்தான் மனிதனின் முதல் கதைக்கான ஆரம்பம்’ என்று மதி எழுதியிருப்பதுபோலவே அவ்வாரம்பத்தின் முதற்படியைத் தொட்டிருக்கிறார் என்று என்னளவில் நம்புகிறேன்.

(மேலும் எனக்கு சிந்தனைப் பள்ளிகளின் மீது புகாரிருந்ததில்லை. ஆனால் அதை பின்னட்டை குறிப்பில் முன்மொழிந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.)

நூல் ~ ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும்
ஆசிரியர் ~ மதிஅழகன் பழனிச்சாமி
வெளியீடு ~ எதிர்         


Comments