பெரியப்பனின் நொண்டிக்கால் நெய்த சீலையை
உடுத்துகிறார்கள் ஊர்க்குடிகள்
பாவு அடசும் யாருக்கும்
பாவுப் பணைக்கவும் அவரே
சிட்டம் பிரிக்கும் நூதன
கண்களில்
ஓட்டிடுவார்
முப்பது களிகளை
கச்சாத்து பார்த்து கணக்கு
தீர்க்கும் நாளில்
பாவோடியின் தேவடியாத்தனத்தை
தலை தீர்த்து தாண்டவமாடினார்
ஒற்றைக்கால் பெரியப்பனே
கும்பிடுறேன் தில்லை நடராசனே
நன்றி : மணல்வீடு, இதழ் 43
அருமை தமிழ்
ReplyDeleteஅருமை தமிழ்
ReplyDelete